தொலைக்காட்சியின் மூலையில் தெரியும் ஒரு சின்ன திரையில் ஒரு பெண்மனி செய்தியை இந்தியிலோ ஆங்கிலத்திலோ வாசிக்க, பெரிய திரையில்(!) சற்று தடித்த பெண்மனி (Sign Language) எனப்படும் ஊமை பாஷையில் செய்தியை வேகமாக விளக்கிக் கொண்டிருப்பார்..ஆனால் சேனலை மாற்றினால் காது கிழியும் அளவுக்கு காட்டுக் கூச்சல் போடும் இப்போதயை 24 மணி நேர செய்தி சேனல்கள் ஏன் இது போன்ற செய்திகளை இப்போது வழங்குவது இல்லை?
சமூகத்தில் ஒரு அங்கமான காது கேளாத, வாய் பேச முடியாத மக்களுக்கு பல வருடங்களுக்கு முன்பே தூர்தர்ஷன் என்ற அரசு நிறுவனம் வழங்கி வந்த ஒரு சேவையை, ஏன் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டபிறகும் இப்போது வழங்க முடியவில்லை?
ஒரே வார்த்தையில் பதில் வரும் வர்த்தக நோக்கு என்று..!
No comments:
Post a Comment