Saturday, December 17, 2011

Times of India-வின் அடாவடி...!!!

தி வீக் என்ட் லீடர் என்ற இணையதளத்தில் கடந்த வாரம், “தி எம் ஃபேக்டர்” என்ற தலைப்பில் ஒரு ராதிகா கிரி என்ற பத்திரிக்கையாளர் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms என்ற தலைப்பில் அந்தக் கட்டுரையில், The opinion piece below the story “TN theatres bow to protests, pull the plug on Dam999,” started quite innocuously, defending freedom of expression. But the bomb was in the third sentence, which read: “Admittedly, the Mullaperiyar dam is an emotive issue and often exploited by political parties to generate sympathy among people in the southern districts.”

It is common knowledge that Mullaiperiyar (‘Mullaperiyar’ without the ‘I’ is typical Malayalee spelling and pronunciation, which Times of India prefers to follow) is an emotive issue in Kerala and not Tamil Nadu, though there is now a fear that the Kerala government, journalists and people together may make the issue emotive here also through the falsehoods they are systematically spreading.

So, without any doubt, one can say that the ‘Times View’ was a Malayalee’s view even if he or she was living in Chennai and working as a journalist.

Those with some insight into the media industry know the composition of the Times of India’s newsroom in Chennai. Every key post in the paper is held by a Malayalee – a Nair or Menon and so on. The Resident Editor, Political Editor and Metro Editor are all Malayalees.

டேம் 999 என்ற படத்துக்கு தடை விதிக்கப் பட்டது தொடர்பான செய்தியில், முல்லைப் பெரியாறு பிரச்சினை அரசியல்வாதிகள் தென் மாநில மக்களிடையே அரசியல் ஆதாயம் தேடுவதான ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினை. முல்லப் பெரியாறு பிரச்சினை தமிழ்நாட்டை விட கேரளாவில் ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாக இருந்தாலும், தற்போது தமிழகத்தில் உள்ள பத்திரிக்கையாளர்களும், பொதுமக்களு சேர்ந்து பல்வேறு வதந்திகளை பரப்பி வருவதன் மூலம் இங்கேயும் இதை ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாக்கி வருகின்றனர். இந்தக் கருத்தை டைம்ஸ் வியூ, அதாவது டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்து என்ற போர்வையில் வெளியிட்டுள்ளனர். இது டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்து அல்ல. மலையளிகளின் கருத்து.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை அலுவலகம் முழுக்க முழுக்க மலையாளிகளால் நிரம்பியுள்ளது. ரிப்போர்ட்டர்களாக தமிழர்கள் இருந்தாலும், ரெசிடென்ட் எடிட்டர், பொலிடிக்கல் எடிட்டர், மெட்ரோ எடிட்டர் என்று அனைவருமே மலையாளிகள் தான். அருண் ராம், கிரண், சுனில் நாயர், ஜெயா மேனன் என்று முழுக்க முழுக்க மலையாளிகள் ஆதிக்கமே. மலையாளிகள் தமிழ்நாட்டில் பணியாற்றுவதும், தமிழர்கள் கேரளத்தில் பணியாற்றுவதும் ஒரு ஜனநாயக நாட்டில் சகஜம் என்று எடுத்துக் கொண்டாலும் கூட, தங்கள் மொழி மீதுள்ள பாசத்துக்காக செய்திகளில் நடுநிலை தவறுவதை எப்படி அனுமதிப்பது ?

முல்லைப் பெரியாறு பிரச்சினை, கேரளாவில் மட்டும்தான் உணர்வு பூர்வமான பிரச்சினையா ? இப்படி எழுதுவது நடுநிலையான எழுத்தா ? இவ்வாறு சென்னையில் ஊடகத்துறையில் உள்ள மலையாளிகள் அனைவரும் மிக மிக வலுவான ஒரு இடத்தில் உள்ளனர். எது செய்தியாக வேண்டும், எது செய்திகாகக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளனர். அச்சு ஊடகத்தை விட, காட்சி ஊடகத்தில் இவர்களின் ஆதிக்கம் வெகு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கியமாக சொல்லப் படும் ஒரு காரணம், சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் என்ற ஊடக பயிற்சிக் கல்லூரி. இந்தக் கல்லூரியை நடத்துபவர் ஏசியா நெட் தொலைக்காட்சி சேனலை உருவாக்கிய சசிக்குமார். இவர் ஒரு மலையாளி. இந்தக் கல்லூரியில் படித்து வெளிவருபவர்களில் பெரும்பாலும் மலையாளிகளாகவே இருக்கின்றனர். இவர்கள் சென்னையில் உள்ள பெரும்பாலான ஆங்கில ஊடகங்களில் வேலைக்கு செல்கின்றனர். ஏற்கனவே ஆங்கில ஊடகங்களில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் மலையாளிகளின் உதவியோடு, இவர்களுக்கு ஆங்கில ஊடகங்களில் எளிதாக வேலை கிடைத்து விடுகிறது.

மேலும், தமிழக ஊடக உலகத்தில் பரவலாக இருக்கும் ஒரு கருத்து, மலையாளிகளுக்குத்தான் ஆங்கிலம் நன்கு தெரியும் என்பது. இந்தக் கருத்தும் மலையாளிகளுக்கு ஆங்கில ஊடகங்களில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

இந்த மலையாளிகளுக்கு தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ்ச் சூழல் குறித்த புரிதல் இல்லாத காரணத்தால் இஷ்டத்துக்கு கட்டுரைகளையும் செய்திகளையும் எழுதி வருகிறார்கள்.

இப்படி மலையாளிகளின் ஆதிக்கத்தில் தமிழ்நாட்டு ஆங்கில ஊடகங்கள் இருப்பதால் என்ன பாதிப்பு என்றால், மலையாளிகளின் பார்வையை செய்தித்தாளின் பார்வையாக திரித்து வெளியிடும் போக்கு அதிமாகி இருக்கிறது.

நேற்றைய (டிசம்பர் 16, 2011) டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டையே எடுத்துக் கொள்ளலாம். நேற்று தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முல்லைப் பெரியாறு பிரச்சினையை விவாதிப்பதற்கென்றே நடைபெற்றது. தமிழகத்தில் வரலாறு காணாத அதிசயமாக, தமிழக அரசியல் கட்சிகள் கட்சி பேதத்தையெல்லாம் கடந்து, தமிழக மக்களின் நலனை முன்னிறுத்தி ஒரே குரலில் குரல் கொடுத்தன.

இந்த விஷயம் தலைப்புச் செய்தியாக இடம் பெற வேண்டுமா என்றால் நிச்சயம் இடம் பெற வேண்டும். இந்து, டெக்கான் க்ரானிக்கிள், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிக்கைகள் முதல் பக்கத்தில் தமிழ்நாட்டு சட்டப்பேரவை தீர்மானத்தை செய்தியாக வெளியிட்டிருந்தன. ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியாவில் முதல் பக்கத்து செய்தி என்ன தெரியுமா ?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் மலையாள பட ரிலீசுக்கு பாதிப்பு என்பதுதான் முதல் பக்கத்து செய்தி.


Dam row hits Malayalam film releases

Arun Janardhanan TNN

Chennai: They’re both much awaited films from Malayalam cinema’s biggest heroes — “Venicile Vyapari”, starring Mammootty, and “Arabiyum Ottakavum P Madhavan Nairum”, starring Mohanlal and directed by Priyadarshan. But audiences in Tamil Nadu may not get to see them soon as theatre owners are reportedly reluctant to screen the films due to the Mullaperiyar issue.
The Kerala Malayalam Film Distributors’ Association on Thursday said the release of the films was delayed since theatre owners in Chennai and other cities in Tamil Nadu had refused to take the film prints as they were afraid of attacks on their theatres.
Abirami Ramanathan, president of the Theatre Owners’ Federation in Chennai,said he was not aware of this. “We do not entertain decisions to stop the release of any film. Just like Malayalam films are doing well in TN, Tamil movies are running successfully in Kerala,” he said.

G P Vijayakumar, distributor of the Mohanlal film, said both mega movies from Kerala would not be released in Chennai on Friday. “The Indian release date is December 16. All major cities except Chennai are ready for release,” he said.

“The Tamil Film Exhibitors’ Association clarified that no decision had been taken to avoid Malayalam movies. But theatre owners have made individual decisions not to release the films as they are afraid of attacks due to the Mullaperiyar issue. We are still discussing the matter and the films may be released in two weeks,” he said.

K Jayakumar, general manager of Sangam Cinemas in Chennai, which screens Malayalam films, said his three theatres are booked for other movies, including “Mission Impossible: Ghost Protocol” and Vikram’s “Rajapattai”.
“We do not have the screens to release the Malayalam movies,” said Jayakumar.

Malayalam movies made on a budget of Rs 5 crore to Rs 8 crore usually earn Rs16 lakhtoRs20 lakh in Tamil Nadu. Major Malayalam films are released in about 25 theatres in Tamil Nadu.
Sabu Cherian, chairman of Kerala State Film DevelopmentCorporation,said10%to 15% of the revenues for Malayalam moviescomefrom Tamil Nadu. “Tamil films also do well in Kerala, attracting a large crowd. The issue has to be settled immediately,” he said.

Sources in Tamil Nadu Film Exhibitors’ Association said the state government has promised them security to screen Malayalam movies. “Both the DMK and AIADMK have no issues,but some theatre owners have taken a decision to skip screening the movies out of fear,” a source said.

மம்மூட்டி நடித்த வெனீசிலே வியாபாரி மற்றும் மோகன்லாலின் அரேபியும் ஓட்டக்காவும் ப்பி.மாதவன் நாயரும் என்ற இரண்டு திரைப்படங்கள் இன்று சென்னையில் ரிலீசாக வேண்டுமாம். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சினையால் இந்த இரு திரைப்படங்களை திரையிட, சென்னைத் திரையரங்க உரிமையாளர்கள் மறுக்கிறார்களாம். மலையாளத் திரைப்படங்களின் 15 சதவிகித வருமானம் தமிழ்நாட்டிலிருந்து என்பதால், இது மலையாளத் திரைப்பட உலகத்தை பாதிக்கும் என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

அந்த முதல்பக்கத்து செய்தியில் இன்செட்டாக சிறிய அளவில் தமிழக சட்டசபையில் தீர்மானம் என்று போட்டு விட்டு, செய்தியை 9ம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

இதுதான் செய்தி வெளியிடும் லட்சணமா ? விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்று போராடிக் கொண்டிருக்கும் சூழலில், மலையாளத் திரைப்படங்கள் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்று செய்தி வெளியிடும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டை ஏன் புறக்கணிக்கக் கூடாது என்பதை தமிழாய்ந்த அன்பு உள்ளங்கள் நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தி வீக் என்ட் லீடர் வெளியிட்டுள்ள இந்த செய்திக்கு மறுப்பு வெளியிட சொல்லியும், 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டும் டைம்ஸ் ஆப் இந்தியா நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நன்றி: சவுக்கு

Wednesday, December 14, 2011

அரசுப் பேருந்தில் ஊருக்கு போறீங்களா? இதை கொஞ்சம் படிங்க..!!

தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் ஏழு கோட்டங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த கோட்டங்களில் இருந்து ஒன்பது ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் அதிக தூரமுள்ள இடங்களுக்கு சென்று வருகின்றன.

இப்படி இயக்கப்படும் பேருந்துகள் விழுப்புரம்,திண்டிவனம்,கிருஷ்ணகிரி, தாராபுரம், அவினாசி, கொடைரோடு, வேடசந்தூர் போன்ற இடங்களில் உள்ள சில பயணவழி உணவகங்களில் (Motel) நின்று செல்கின்றன.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஒவ்வொரு ஊரிலும் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள உணவகங்களில் பயணிகள் சென்று சாப்பிட்டுவிட்டு செல்ல அனுமதித்த ஓட்டுனர்கள், இந்த பயணவழி உணவகங்கள் துவங்கப்பட்ட பின்னர், பேருந்து நிலையங்களில் பேருந்தை நிறுத்தாமல், இந்த பயணவழி உணவகங்களிலேயே பேருந்துகளை நிறுத்துகிறார்கள்.


அதற்கு காரணம், அந்த உணவகங்களில் ஓட்டுனர், மற்றும் நடத்துனர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் சாப்பாடு, ஒரு தட்டு கோழிக்கறி, வெற்றிலை பாக்கு, ஒரு பாக்கெட் வில்ஸ் அல்லது கோல்டுபிளாக் சிகரெட் பாக்கெட் போன்றவைதான்.

ஆனால், பொதுமக்களை கொள்ளையடிக்கும் இந்த உணவகங்களில் சாதாரனமாக் கடைகளில் கிடைக்கும் சிகரெட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் என எல்லாவற்றிக்கும் அதன் விற்பனை விலையை விடவும் இரண்டு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை கூடுதலாக விற்கிறார்கள்.

இந்த உணவகங்களில் சாப்பிட போகும் பயணிகள் மினரல் வாட்டர் வாங்க வேண்டும் என்பதற்காக குடிப்பதற்கு கொடுக்கும் தண்ணீரில் உப்பை கலந்துவிடுகிறார்கள். 50 ரூபாய்க்கு கொடுக்கும் சாப்பாடிற்கு சாம்பார் ரசம், மோர் என எல்லாமே தண்ணீர் போலதான் இருக்கும்.

காசு கொடுத்து வாங்கியதை தூக்கி குப்பையில் போட்டுவிட்டு சிறுநீர் கழிப்பதற்கு போனால் அதற்கும் 2 ரூபாய் பிடுங்கும் இந்த பயனவழி உணவகங்கள் ஆட்சிக்கு தக்கபடி தங்களின் சாயத்தை மாற்றி மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது இந்த பயணவழி உணவகங்களின் கொள்ளைக்கு அரசு போக்குவரத்து கழகமே அங்கீகாரம் கொடுக்கும் விதமாக ஒவ்வொரு போக்குவரத்து கழகமும் அந்த பகுதிகளில் உள்ள பயணவழி உணவகங்களின் உரிமையாளர்களிடம் ஒரு பேருந்து வந்து சென்றால் அந்த கோட்ட போக்குவரத்து கழகத்துக்கு 40 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்று ஒப்பந்தம் போட்டு உணவாக உரிமையாளரிடம் வசூல் செய்துகொள்கிறார்கள்.

இதனால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு ஓசியில் கொடுத்த கோழிக்கறியை இப்போது நிறுத்திவிட்டார்கள். இலவச சிகரெட் ஒரு பாக்கெட் என்ற அளவு போய் இப்போது இரண்டு சிகரெட் மட்டுமே கொடுக்கிறார்கள். அளவில்லா சாப்பாட்டும் இப்போது அளவு சாப்பாடாகி விட்டது.

இந்த ஓசி சமாச்சாரங்கள் கிடைக்காத காரணத்தால் ஓட்டுனர்கள் சிலர் இந்த பயணவழி உணவகங்களில் நிற்காமல் சென்றதால், எச்சரிக்கையான போக்குவரத்து நிர்வாகம் "இப்போது தாங்கள் அங்கீகரித்துள்ள உணவகங்களில் நின்று பயணிகளின் கையில் உள்ள காசையெல்லாம் பிடுங்கி உணவகத்தில் கொடுத்ததற்கு அத்தாட்சியாக உங்களது இன்வைஸ்’ல் உணவக முதலாளியிடம் கையெழுத்து வாங்கிவா" என்று நடத்துனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது அரசு போக்குவரத்து கழகங்கள்.

"எங்களுக்கும், பயணிகளுக்கும் வசதியான பயணவழி உணவங்களில் தான் பேருந்துகளை நிறுத்துவோம் என்று கடந்த திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தினோம். ஆனால் தற்போது அந்தப் பேச்சுக்கே வேலையில்லை" என்று ஓட்டுனர்களும், நடத்துனர்களும் புலம்புகின்றனர்.

வருமானத்தை பெருக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு மின்கட்டணம், பேருந்து கட்டணம், பால்விலை என பல அவசியமான பொருட்களுக்கு விலை ஏற்றியதுடன் நிற்காமல், கூடுதலாக எலைட் பார்களும் திறக்க உள்ளது.

இன்னும் வருமானம் வேண்டும் என்றால் என்னென்ன செய்வார்களோ? என்று பொதுமக்கள் புலம்புகின்றனர்.

நன்றி: நக்கீரன்

Wednesday, November 30, 2011

பாவம் தமிழன்!

கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.


கேரள முதலமைச்சரும் அம்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தில்லியில் பிரதமரையும் மற்றவர்களையும் சந்தித்துத் தங்களின் நேர்மையற்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.

அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.

தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.

உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.

2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.

1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.

எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.

ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது. ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.

இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.

அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.

தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.

நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.

முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.

பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.

அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.

கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.

இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.

அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.

காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.

பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.

புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.

தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.

பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?

மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.

புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் (ஆனந்தவிகடன் 19-1-2003):

தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.

ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.

பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.

இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன்.

-பழ. நெடுமாறன், தினமணி

Saturday, November 26, 2011

ஏன் இந்த கொலைவெறி?

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்ட செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடாமல் எட்டாம் பக்கம், பத்தாம் பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிற ஓர் ஆங்கில செய்தித்தாள், முதல் பக்கத்தில் ‘கொலைவெறி’ சினிமாப் பாடல் சூப்பர் ஹிட்டான செய்தியை நான்கு காலம் தலைப்பிட்டு வெளியிடுகிறது. ஏன் இந்தக் கொலைவெறி ?


கம்ர்ஷியல் சினிமாகாரர்கள் எப்போதும் மிகையான பப்ளிசிட்டியில் ஈடுபடுவது வழக்கம். அது அவர்களுக்கு ‘தொழில் தர்மம்’. இருபது லட்ச ரூபாயில் ஒரு செட் நிர்மாணித்தால், மூன்று கோடி செலவிட்டதாக சொல்வார்கள். நடிக்கும் பாத்திரத்துக்காக நடிகர் தன்னை என்னென்னவோ விதத்தில் வருத்திக் கொண்டதாக சொல்வார்கள். அசல் வருத்தம் 10 சதவிகிதம் என்றால் பப்ளிசிட்டி வருத்தம் 150 சதவிகிதமாக இருக்கும். அறுபதுகளில் ஒரு முறை ஒரு நடிகர் தான் நடிக்கும் பாத்திரத்துக்காகத் தொடர்ந்து தலையை மொட்டையடித்துக் கொள்வதாக செய்தி வெளியானபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் அப்போது அவருக்கிருந்த அவருக்கே உரிய நையாண்டியில் கேட்டார் : அந்த நடிகர் ஒரு இஸ்லாமியர் வேடத்தில் நடித்தாரே, அதற்காக முறைப்படி சுன்னத் செய்துகொண்டாரா ?! சினிமாகாரர்கள் பப்ளிசிட்டி செய்ய வேறு எதுவும் இல்லாவிட்டால், குறைந்தபட்சம், ஒரு நடிகரோ நடிகையோ அண்ணா சாலையில் நடந்து போகிற காட்சியை படம் பிடித்ததைக் கூட, ‘கொளுத்தும் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நடித்த ஜிகினாஸ்ரீ மருத்துவமனையில் கொப்புளங்களுடன் அனுமதி ‘ என்று பரபரப்பாக்குவார்கள்.அந்த வரிசையில் படத்துக்கான முன்னோட்ட பப்ளிசிடியாகத்தான் ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாட்டு வந்திருக்கிறது. ரஜினிகாந்த் தொடர்புள்ள எதையும் செய்தியாக்கி விற்பனை செய்வதில் பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் இருக்கும் கொலைவெறிக்கு இது சரியான தீனி. படத்தின் டைரக்டர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா. நாயகன் மருமகன் தனுஷ். ஜோடி கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி. சிறந்த நடிகர் விருது வாங்கிவிட்ட தனுஷ் அடுத்து சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் ஆங்கிலப் பாடலாசிரியர் . தொடர்ந்து முயற்சித்தால் தமிழ் சினிமாவில் இடம் பெறும் ஆங்கில பாட்டுகளை எழுதுபவரான ராண்டார் கையின் இடத்தை தனுஷ் பிடிக்கக்கூடும்.

கொலை வெறிபாட்டு ஏன் ஹிட்டானது ? அதில் அப்படி என்னதான் இருக்கிறது ?

இன்றைக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக தொடர்புக்கான இணைய தளங்களில் ஒரு பாட்டோ ஒரு பொருளோ ஒரு விஷயமோ ஹிட் ஆவது பெரிய விஷயம் இல்லை. சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பொய்க் கணக்குகளை ஆயிரக்கணக்கில் வைத்திருக்கின்றன. இவையெல்லாம் இளம் ஆண்கள், பெண்கள் பெயரில் உலவுகின்றன. இவற்றில் ‘லேட்டஸ்ட் மாடல் …… ஷூவை பார்த்தியா? அருண் போட்டுகிட்டு வந்தான். ஆவ்சம்’ என்று அகல்யா ஷோபாவுக்கு ஸ்டேட்டஸ் போடுவாள். இதை ஐநூறு பேர் லைக் பண்ணுவார்கள். , அருண், அகல்யா, ஷோபா, லைக் பண்ணும் ஐநூறு பேர் எல்லாரும் கற்பனைப் பாத்திரங்கள். ஃபேஸ்புக்கில் நிஜம் போல உலவுபவர்கள். ஷூ கம்பெனியால் உலவவிடப்பட்டவர்கள். புது ஷூ செய்தி போதுமான அளவு பரப்பப்பட்ட்ட பின்னர்தான் கம்பெனி ஷூவை மார்க்கெட்டுக்கே அனுப்பும் !

இந்த மாதிரி நவீன டெக்னாலஜி சார்ந்த வணிக சாமர்த்தியங்களை தமிழ் வணிக சினிமா அடைந்துவிட்டதா என்று தெரியவில்லை. அதை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பது நிச்சயம்.

கொலைவெறி பாட்டு நாடெங்கும் இளைஞர்களின் தேசிய கீதமாக ஆகிவிட்டடதாக செய்திகள் பரப்பப்படுகின்றன. சென்னையில் அது தமிழ்ப்படத்தில் இருக்கும் ஆங்கிலப்பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. வடக்கே ஹிந்தி வானொலி சேனல்களில் ஒலிபரப்பப்படும் முதல் ‘தமிழ்’ப் பாட்டாக வர்ணிக்கப்படுகிறது. பாட்டு கேட்கும் இளம் மனங்களில் இடம் பிடிக்க அடிப்படைக் காரணம் கால்தட்டவைக்கும் தாள கதியும் எளிமையான வடிவமும்தான். திரும்பப் பாடிப்பார்க்க வசதியான பாட்டு. உண்மையில் பாட்டு என்றே சொல்ல முடியாது. தாளத்துக்கேற்ப பேசுதல்தான். உச்சாடனம், ஓதுதல் என்பதன் பல்வேறு வடிவங்களாக ராப், ரெகெ போன்றவை உருவாகி வந்திருப்பதன் இன்னொரு தொடர்ச்சி இது.

பாடலின் விஷயம்தான் நம் ஆழ்ந்த கவனத்துக்குரியது. கல்யாணப்பரிசு காலத்திலிருந்து சினிமாவில் இருக்கும் ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருத்தன்’ தீம்தான். ஆனால் அறுபது வருட முந்தைய தமிழ்க் காளைக்கும் இன்று தனுஷ் மூலம் சித்திரிக்கப்படும் தமிழ்க் காளைக்கும் கடுமையான வேறுபாடு இருக்கிறது.

இன்று தனுஷ் காட்டும் இளைஞன் விடலையாக, பொறுக்கியாக, ஒரு சமூகப் புல்லுருவியாக இருக்கிறான்.ஆடுகளம் படத்தில் தனுஷ் ஏற்ற பாத்திரம் அவன் குடும்பத்துக்கு எந்த விதத்திலும் பயன்படாத ஒரு மனிதன் பற்றியது. விதவைத்தாய் வறுமையில் புலம்பிக்கொண்டே இருக்கிறாள். அவள் பேசினாலே, “ஸ்பீக்கரை ஆஃப் பண்ணு” என்று விடலை மொழியில் வாயை மூடச் சொல்லுகிறான். தொடர்ந்து பேசும் தாயிடம் வாயை மூடாவிட்டால், ‘கொன்னே போடுவேன்’ என்று கர்ஜிக்கிறான். செவத்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணைத் துரத்தித்துரத்தி மிரட்டி மிரட்டிக் காதலிக்க வைக்கிறான்.முப்பது நாற்பது வயதைக் கடந்தவர்களுக்குத்தான் இந்த படத்தின் சேவல் சண்டை பண்பாட்டு அடையாளம். தனுஷ் என்ற கதாநாயகனுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் 14 முதல் 20 வரையிலான எண்ணற்ற இளைஞர்களுக்கு பொறுக்கித்தனமும் பெண் சீண்டலும்தான் படத்தின் செய்தி.

குடும்பப் படமாக, அதாவது குடும்பத்தோடு சென்று கண்டு களிக்க ஏற்றவையாக சென்ற வருடம் பாராட்டப்பட்ட இன்னொரு படம் களவாணி. விமல் நாயகனாக நடித்த இந்தப்படத்தின் நாயகப்பாத்திரம் இன்னொரு பொறுக்கி. துபாயிலிருந்து அப்பா அனுப்பும் பணத்தை அம்மாவிடமிருந்து ஏமாற்றிப் பிடிங்கிக் கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் ஊர் சுற்றி வந்து பள்ளிக்குச் செல்லும் மாணவிகளின் சைக்கிளைத் தடுத்துப் பிடித்துத் தன்னைக் காதலிக்கும்படி மிரட்டுபவன். இந்தப் படமும் விமலுக்கு பதில் தனுஷ் நடித்திருக்கக்கூடிய ஒரு படம்தான்.

இரு படங்களிலும் பொறுக்கி கதாநாயகர்களால் காதலிக்கும்படி மிரட்டப்பட்ட நாயகிகள் அடுத்த கட்டத்தில் தாமே மனமுவந்து காதலிக்கிறார்கள்.இதுதான் விடலை மனங்களுக்குக் களிப்பூட்டும் செய்தி.

இந்த வரிசையில்தான் ‘கொலைவெறி’பாடலையும் பார்க்க வேண்டியிருக்கிறது. செவத்த பெண் ஏமாற்றிவிட்டாள். கறுத்த பையன் புலம்புகிறான். வெள்ளை நிலா கறுப்பு வானத்தில் இருப்பது போல நாம் இருக்க முடியாதா என்று ஏங்குகிறான்.

தன் காதலை ஏற்காதவளைக் கொலை வெறி பிடித்தவள் என்று வர்ணிக்கிறான்.

கொலை வெறி பாடல் வந்திருக்கும் அதே சமயத்தில் வெளியாகியிருக்கும் இன்னொரு தனுஷ் பாடிய பாடல் என் காதல் அது கண்ணீருல.. இதில் பிரபலமான வரிகள் : அடிடா அவளை உதைடா அவளை என்பவைதான். எதற்கு அடிக்கவேண்டும்? உதைக்க வேண்டும்? இவனைக் காதலிக்க அவள் மறுத்துவிட்டதற்குத்தான். விடலை மனங்களுக்கு இன்னொரு செய்தி. உனக்குக் கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கவேண்டாம். அவள் எதற்கு இருக்க வேண்டும்? அடி உதை கொல்லு… தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் ஊற்றுவது தொடர்ந்து நடக்கும் கொடுமையான வன்முறை.

இரு பாடல்களிலும் குடிப்பதும் போதையும் இந்த சோகத்துக்கு மருந்தாக ஆறுதலாக சொல்லப்படுகிறது. இருபதாயிரம் கோடி ரூபாய் விற்பனையை நோக்கி தமிழக அரசின் மது வியாபாரம் படுவேகமாக ‘வளர்ந்து’ கொண்டிருக்கும் நிலையில், ப்ளஸ் டூவிலேயே போதை அடிமைகள் உருவாகிக் கொண்டிருப்பதை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

எந்த சமூகத்திலும் விடலைகள் இருப்பார்கள். பொறுக்கிகள் இருப்பார்கள். அவர்களை மன முதிர்ச்சியும் பக்குவமும் உடையவர்களாக ஆக்கவே கல்வியும், கலைகளும் ஒரு சமூகத்தால் பயன்படுத்தப்படும். மாறாக அவர்களை ஊக்கப்படுத்துவதை நியாயப்படுத்துவதை கதாநாயக பாத்திரங்களாக்கிக் கொண்டாடுவதை ரசிப்பதை செய்யும் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக் கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம்.

இன்றைய தமிழ் சமூகத்தில் வளரிளம்பருவத்தில் இருக்கும் பையன்களுக்கும் பெண்களுக்கும் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. அவற்றைத் தீர்ப்பதற்கு பதில் கொலைவெறியோடு அதிகரிப்பதையே கொலைவெறி பாடல் கலாசாரம் செய்கிறது. ஆண்-பெண் உறவு எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதே விடலைப்பருவத்தில் புரியாத சிக்கலாக பலருக்கு இருக்கிறது. செவத்த பெண்ணுக்காக ஏங்கும் கறுத்த பையன் என்ற பிம்பம் இருவருக்கும் ஆபத்தானது. செவப்பும் கறுப்பும் உடல் நிறமும் பிரதான விஷயங்களே அல்ல. மன்ம்தான் முக்கியம், அறிவுதன முக்கியம். அன்புதான் முக்கியம் என்ற பார்வைக்கு பதில் உடல் சார்ந்து மட்டுமே இவை இளம் மனதைத் தூண்டுகின்றன.நம் சமூகத்தின் நிறவெறியின் இன்னொரு வடிவமே கொலை வெறி பாட்டு.

இப்படிப்பட்ட பாடல்கள் ஹிட் ஆவது பற்றி வியாபாரிகள் மகிழ்ச்சியடையலாம். எதிர்காலத் தமிழகம் பற்றி சிந்திக்கும் ஒருவரும் மகிழ்ச்சியடையமுடியாது. பொறுக்கியாக நடிக்கும் தனுஷோ,நடிக்கவைக்கும் ஐஸ்வர்யா, வெற்றிமாறன்களோ தங்கள் அன்றாட நிஜ வாழ்க்கையில் ஒழுங்கும் கட்டுப்பாடும், உடையவர்களாக வாழ்வதினால்தான் அவர்களால் ‘தொழிலை’ ஒழுங்காகச் செய்யமுடிகிறது. ஆனால் அவர்கள் உலவவிடும் பாத்திரங்கள் தமிழகத்தின் பள்ளிகளிலும், தெருக்களிலும் ஏராளமான இளம் மனங்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. இந்த அலைக்கழிப்பிலிருந்து வழிநடத்த நம்மிடம் முறையான கவுன்சிலிங் அமைப்புகள் எதுவும் இல்லை. வழி காட்டக்கூடிய ஊடகங்களே அவர்களை திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம். நாய் விற்ற காசு குரைக்காது என்பதுதான் அரசு முதல் படைப்பாளிகள் வரை தாரக மந்திரமாகிவிட்டது.

- ஞாநி (ஓ பக்கங்கள்)

Tuesday, August 30, 2011

தூக்கு - ஒரு சட்டப்பார்வை

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பல்வேறு கருத்துக்களை உள்வாங்கி வடிவமைக்கபட்டுள்ளது. குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்தாலும் சில காரணங்களுக்காக கருணை மனுவை நிராகரித்ததற்கு ஏற்பட்ட தாமதம் இன்ன பிற வழிகளில் மேல்முறைஈட்டிற்கு வழி செய்கிறது.

நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புகள் , கைதிகளிடம் இருந்து வாங்கப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலும், வாதாடும் வக்கீல்களின் திறன்களின் அடிப்படையிலும் இன்ன பிற சாட்சியங்களின் அடிப்படையிலும் , வகுக்கப்பட்ட சட்டம் வரையரம்புகளை பொறுத்து தீர்ப்பு வழங்க வழி செய்கிறது. மேல் முறைஈடிற்கும் வழி செய்கிறது.

குற்றம் உறுதி செய்யபடுகின்ற போது தண்டனைகள் உறுதி செய்யப்பட்டு அதிக பட்ச தண்டனைகளுக்கு நீதிமன்ற வழக்குகளுக்கு, நடைமுறைகளுக்கு மாறாக மனிதாபிமான மற்றும் நாட்டு நடப்பு, சமூகத்தில் தண்டனையின் பாதிப்பு இவற்றை கருத்தில் கொண்டு அந்த தண்டனைகளை மன்னித்து வீரியத்தை குறைக்க ஆளுநருக்கும், குடியரசு தலைவருக்கும் சில பிரத்தியேக அதிகாரங்களை கொடுக்கிறது .

சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகியோரது வழக்கில் காலம் தாழ்த்தப்பட்ட தண்டனை என்பது உச்ச தண்டனையை ஒத்தி வைக்க சில வழி வகைகளை செய்கிறது ..அதே சமயம் கடுமையான வாதங்களினால் சில சாதகமான தீர்ப்புகளும் வந்து சேரலாம். குடியரசு தலைவர் பிரதிபா பாட்டிலால் இந்த ஆண்டு வேறு இரண்டு வழக்குகளிலும் கருணை மனு நிராகரிகபட்டது. அந்த இரண்டு வழக்கும் நீதிமன்றத்தில் கருணை மனு நிராகரிக்க பட்டதற்கான கால தாமதத்தால் மேல் முறையீட்டில் உள்ளன. அதனால் விதிக்கப்பட தூக்கு தண்டனைக்கு இடை கால தடை உள்ளது .

1. சீக்கிய விடுதலை படை தலைவர் புல்லார் வழக்கு, ஜெர்மனியில் பணி புரிந்த இவர் மும்பையில் குண்டு வெடிப்புக்கு சதிசெய்து ஒன்பது பேரை கொன்றதாக தடா பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டு, கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டவர்

2. அஸ்ஸாமை சேர்ந்த மகேந்திர நாத் தாஸ் என்பவர் ஒரு நபரை கடை தெருவில் வைத்து கழுத்தை அறுத்து தலையை எடுத்து சென்று காவல் நிலையத்தில் கொடுத்ததாக உள்ள கொடுர வழக்கு

மேற்கண்ட இரண்டு வழக்கிற்கும் காலம் கடந்த கருணை மனு நிராகரிபிர்க்கு கால தாமதத்துக்கான காரணம் கேட்டு நீதிமன்றம் உள்துறைக்கும்,மாநில அரசிற்கும், சிறை துறைக்கும் விளக்கம் அளிக்க கேட்டு உள்ளது .. இந்த விளக்கங்களின் அடிப்படையில் இதில் தீர்ப்பு வழங்கப் படலாம் ...மத்திய, மாநில அரசு துறைகளின் பதில்களின் கால அளவை பொறுத்து வழக்கு நீளலாம்.. இதே போல் இந்த பேரறிவாளன் இன்ன பிறர் மரண தண்டனை வழக்கும் சில காலம் ஒத்தி வைக்கப்பட்டு வழக்கு நடக்க வாய்ப்பு உள்ளது பின் வக்கீலின் வாத திறமையை பொறுத்து,வழக்கின் கால அளவை சில சாதக தீர்ப்பும் குற்றம் சாட்ட பட்டவர்களுக்கு வரலாம்..

56 வது நபராக சுதந்திர இந்தியாவில் தூக்கில் இடபடுபவர் யார் என்ற வினா அனைவர் மனதிலும் எழுந்து உள்ளது . இந்தியாவில் இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு தனஞ்செய் எனும் ஒரு காவலாளி ஒரு சிறு பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் சனாதிபதி அப்துல் கலாம் அவர்களால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டான் அதற்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஆட்டோ சங்கர் தமிழகத்தில் தூக்கில் இடப்பட்டான்.. இதற்கு அடுத்து கருணை மனு நிராகரிகபட்ட வழக்குகள் யாவும் மேல் முறையீட்டில் உள்ளன.

இந்த நிலுவையில் உள்ள வழக்குகளை புறந்தள்ளி மத்திய உள்துறை பேரறிவாளன், இன்ன பிறர் வழக்குகளில் சிரத்தை எடுத்து விரைவு படுத்துமாயின் அதன் பின் அரசியல் இருப்பது அர்த்தமாகிறது.. இதற்கு இடையில் தமிழாக அரசியல் புள்ளிகள் இந்த விவகாரத்தை எடுத்து ஜெயலலிதாவிற்கு நெருக்கடி கொடுக்க தயார் ஆகிறார்கள்.. முந்தைய கருணாநிதி தலைமையின் கீழ் உள்ள அரசால் அங்கிகரிக்பட்ட மூவரின் மரண தண்டனையை மற்றொரு அரசு மறுப்பது முரணாக தோன்றும் .. அதற்கு வாய்ப்பு உள்ளதா என்பது மீண்டும் விவாதத்திற்கு ஆகிறது .. அப்படி ஒரு முடிவை எடுத்தாலும் அதற்கு எதிராக காங்கிரசாரல் கொண்டு வரப்படும் மேல்முரைஈடிற்கு சட்டம் என்ன பதில் சொல்லும்?

மிக அதிக காலம் கடந்த தண்டனை என்பதும், மிக பெரிய மன உளைச்சலுக்கு ஆளான ஒரு இனத்திற்கு , அதன் சமூக மக்களின் மனங்களுக்கு இதனால் மேலும் ஒரு பாதிப்பு என்ற கோணத்திலும் இந்த வழக்கிற்கு சில சாதகங்கள் வந்து சேரலாம். தமிழர்கள் , தமிழக அரசியல், இயக்க தலைவர்கள் ஒன்று இணைந்து செயற்பட்டால் மட்டுமே சாத்தியாமாகும்.

நன்றி: வசந்தமேனன்

Sunday, August 28, 2011

ராஜீவ் காந்தி படுகொலை - புரியாத புதிர்!!

சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான திருச்சி வேலுச்சாமியின் பேட்டி. நூற்றுக்கு நூறு சதவீதம் இன்றைக்கும் பொருந்துகிறது. எந்த வித பக்க சார்பும் இல்லாமல், உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் ஒரு படுகொலை வழக்கை, அதன் மீதான சந்தேகங்களை காரண காரியங்களோடும், ஆதாரங்களுடன் அலசியுள்ளார் இந்த பேட்டியில். மூன்று பேரின் உயிரை தூக்கு கயிறு முன் நிறுத்தியிருக்கும் உயிரற்ற அரசு இயந்திரம், இந்த கேள்விகளுக்கு இன்று வரை பதில் அளிக்கவில்லை.








முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சட்டத்தின் பார்வையில் குற்றவாளிகளாகவே இருக்கட்டும், இவர்களை சாகடித்த பின் இந்த வழக்கில் நடந்து வரும் விசாரணையில், ஒரு கட்டத்தில் உண்மைக் குற்றவாளிகளை (இன்று வரை குற்றத்திற்கு துணை போனவர்கள் என்ற வகையில் தான் இந்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது) கண்டறிய இம்மூவரில் ஒருவரின் வாக்குமூலம் தேவைப்படுமாயின், அப்போது இந்த சட்டங்கள், நீதிமன்றங்கள் இவர்களின் உயிரை திரும்ப கொண்டு வருமா? என்று வேலுச்சாமி எழுப்பும் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

Sunday, July 31, 2011

இதுக்கு பேருதான் விஞ்ஞான ஊழல்!!

மத்திய அமைச்சரவையில் நிதி துறை இணை அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு தி.மு.க ஆட்கள் அடித்த கொள்ளை பற்றி இன்றைய தினமலரில் வந்துள்ளது. அந்த அமைச்சரின் பெயர் பழனிமாணிக்கம்.

வருமானவரித்துறையை ஆட்டிப்படைப்பதன் மூலம், தி.மு.க.,வினர், குறிப்பாக, கருணாநிதி குடும்பத்தினர் எப்படியெல்லாம் பயனடைந்தனர் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர்மையான வருமானவரித்துறை அதிகாரிகள், இதுகுறித்து வெளியிட்ட தகவல்கள்:


தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய அமைச்சராவதற்கு, கனிமொழி சிபாரிசு செய்தார் என்பது ஊரறிந்த ரகசியம். இதேபோல், நிதித் துறை பொறுப்பை கையில் வைத்திருப்பவரை சிபாரிசு செய்தவர், தி.மு.க., தலைவரின் மற்றொரு மகளான செல்வி. இவர் சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் நோக்கத்துடன், அவருக்கு நிதித் துறை பொறுப்பு பெற்றுத் தரப்பட்டது.இவர் ஒரு வழக்கறிஞர் என்றாலும், தகுதியின் அடிப்படையில், அவருக்கு இந்த பதவி கிடைக்கவில்லை. திருவல்லிக்கேனி பெல்ஸ் சாலையில், இவர் மெஸ் ஒன்றை நடத்தி வந்தார். இவரை வைத்து, தி.மு.க.,வினர் எப்படி எல்லாம் பயன் அடைந்துள்ளனர் என்பது, மிகவும் சுவராசியமான தகவல்.


வருமான வரித் துறையை, பணம் சம்பாதிப்பதற்காக, இவர் பயன்படுத்திக் கொண்டார். இவரின் உத்தரவு படி, சில இடங்களில் சோதனை நடத்தப்படும். மேலும், வேறு சில இடங்களில் சோதனை நடந்து கொண்டிருக்கும்போது, இவரது உத்தரவு படி, திடீரென நிறுத்தப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.சி.பி.ஐ., மற்றும் புலனாய்வு அமைப்புகள், இதுகுறித்து விசாரணை நடத்தினால், வருமானவரித்துறையில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சிக்கல் ஏற்படுவது நிச்சயம். காரணம், மந்திரியின் வாய்மொழி உத்தரவு மூலம் தான், சோதனைகள் நிறுத்தப்படுகின்றன.


சோதனை நடத்துவதற்கான வாரண்ட், வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரலிடம் இருந்து பிறப்பிக்கப்படுகிறது. சோதனை நடத்தச் செல்லும் இடம், நபர் பற்றிய விவரங்கள் அனைத்தும் முன் கூட்டியே காண்காணிக்கப்பட்டு, தயார் செய்யப்பட்ட பின்னரே, சோதனை நடத்த உத்தரவிடப்படுகிறது.அப்படி இருக்கும்போது, அமைச்சரிடம் இருந்து வரும் போனின் மூலம், சோதனையை எப்படி நிறுத்த முடியும்? ஆனாலும், ஓய்வு பெற்றதற்கு பின், தமிழகம், கேரளாவில் வங்கி தீர்ப்பாயம் போன்ற முக்கிய பதவி வேண்டும் என்ற ஆசையில், அதிகாரிகள் பலிகடா ஆகி விடுகின்றனர்.


தி.மு.க., தலைவருக்கு பின்னரோ அல்லது காங்கிரசுடனான, தி.மு.க.,உறவு முறிந்து விட்டாலோ, வருமான வரித் துறை, தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என கருதி, தி.மு.க.,வினர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாருக்குமே சந்தேகம் ஏற்படாத வகையில், எந்த வழியிலாவது, வர்த்தக நடவடிக்கைகளுக்கு பணத்தை கொண்டு வருவது மற்றும் வரித் தொடர்பான நடவடிக்கைகள் போன்ற முயற்சிகளை செய்கின்றனர். இதன்மூலம், நிதித் துறை, விஞ்ஞானப்பூர்வமாக, கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.


தமிழகத்தின் வடக்கு மாவட்டத்தை சேர்ந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஒருவர், தன் பதவிக் காலத்தின்போது, அவரது மகன் திருமணத்தை நடத்தினார். திருமணத்துக்கு முன், கட்சியில் உள்ள தன் விசுவாசிகளுக்கு, பல லட்ச ரூபாய்களை விநியோகம் செய்தார். பணத்தை கொடுத்த கையோடு, திருமணத்தின்போது, இந்த பணத்தை, டி.டி.,யாகவோ, பரிசு காசோலையாகவோ, திரும்பச் செலுத்தும்படியும், அவர்களிடம் அறிவுறுத்தினார். வருமான வரித் துறை விசாரணையில் இருந்து, தப்பிக்கும் நோக்கத்துடன் தான் அவர் இப்படிச் செய்தார்.


அதேபோல், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், வரி தொடர்பான பிரச்னைகளில் இருந்து தப்பிப்பதற்காக, விவசாய பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ளார். விவசாயத்தின் மூலம், அதிக பணம் கிடைத்ததாக, முறைகேடாக சம்பாதித்த பணத்தை, கணக்கில் கொண்டு வருவது தான் அவரது திட்டம். முறைகேடாக சம்பாதித்த பணத்தின் மூலம், பெரும்பாலான தி.மு.க.,வினர், இன்ஜினியரிங் கல்லூரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளை, பினாமிகள் மூலமாகவோ, சொந்தமாகவோ நடத்தி வருகின்றனர்.


தொழில் கல்வி நிலையங்களுக்கு சொந்தமான அறக்கட்டளைகள், பல கைகளுக்கு மாறுகின்றன. இவ்வாறு மாறும்போது, பணமும் கை மாறுகிறது. அறக்கட்டளை கைமாறுவது தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும்போது, அதுபற்றி தகவல், வருமான வரித் துறையினருக்கு தெரியாமல் இருக்காது.


ஆனால், என்ன செய்வது?

அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அதிகாரிகளுக்கும் குடும்பங்கள் உள்ளன. அதிகாரிகளின் குழந்தைகளின் கல்வி, மிகவும் முக்கியமானது. கட்சிக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம், விரும்பத் தகாத, தொலைதூர இடங்களுக்கு மாற்றப்படுவதை அதிகாரிகள் விரும்புவது இல்லை. ரூபாய் ஏழு அல்து எட்டு விலையுள்ள வாரப் பத்திரிகைக்கு, 15 ரூபாய் மதிப்புள்ள இலவசங்கள் தரப்படுகின்றன. இதன்மூலம், விற்பனை அதிகரித்துள்ளதாக கூறி, பணத்தை கணக்கில் கொண்டு வருகின்றனர். சரி... இலவச பொருட்களையாவது விலை கொடுத்து வாங்கினார்களா என்றால் அதுவும இல்லை. மிரட்டல் நடவடிக்கைகள் மூலம், தொழிற்சாலைகளில் இருந்து, இலவசங்கள் பெறப்பட்டன.


இதே நிறுவனத்தால் நடத்தப்படும் நாளிதழ், அதிகம் விற்பனை செய்யப்படுவதாக காட்டப்படுகிறது. இதன் மூலம், கணக்கில் காட்டப்படாத பணத்தையும், முறைகேடாக சம்பாதித்த பணத்தையும், கணக்கில் கொண்டு வருகின்றனர். உதாரணமாக, நாளிதழின் விற்பனை ஒரு லட்சம் பிரதிகள் என்றால், விலையை குறைத்து விற்பதால், பல லட்சம் பிரதிகள் விற்பனையாவதாக கூறி, பெருமளவு பணத்தை, தினமும் கணக்கில் காட்டுகின்றனர்.


திரைப்பட தயாரிப்பு விவகாரத்திலும், தி.மு.க.,குடும்பத்தினர் இதே வழிமுறைகளைத் தான் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு வாரமும், திரைப்படங்கள் வெளியாவதை அடுத்து, அவற்றை வெளியிடுவதற்காக, பெரிய அளவில் தியேட்டர்கள் முன் கூட்டியே, "புக்' செய்யப்படுகின்றன. பெரிய அளவு விளம்பரங்களும் செய்யப்படுகின்றன. கொள்ளையடித்த பணத்தை வெள்ளையாக்கும் நோக்கத்துடன் தான் இவைகள் செய்யப்படுகின்றன.


இவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு, "கால்ஷீட்' கொடுக்காத நடிகர், நடிகைகளின் வீடுகளில், அமைச்சரின் உத்தரவின் பேரில், சோதனை நடத்தப்படுகிறது. திரைப்படத் துறையை அழிக்க வேண்டும் என்பது, தி.மு.க.,வின் நோக்கம் இல்லை... ஆனால், இவர்களில் செயல்களால் அது தான் நடந்தது . இதனால் கொந்தளித்த, சினிமா துறையினர் அனைவரும், தி.மு.க., படு தோல்வி அடைய காரணமாக இருந்தனர். "எந்திரன்' திரைப்படம் தயாரிப்பு மற்றும் வெளியீடு விவகாரத்திலும் இது தான் நடந்தது. இதன்மூலம், அவர்களின் கறுப்பு பணம், வெள்ளையாக்கப்பட்டது.


இதுபோன்ற நிதி ஆதாரங்கள் உருவாக்கப்படுவதன் மூலம், விமான நிறுவனத்தை தங்களுடன் இணைத்துக் கொள்வதோ, வேறு நிறுவனங்களை கையகப்படுத்துவதோ, அவர்களுக்கு எளிதாகி விடுகிறது.இவர்களின் கட்சியை சேர்ந்தவரே, நிதித் துறை இணை பொறுப்பு வகிக்கும்போது, இவர்களை எதிர்த்து யார் கேள்வி கேட்க முடியும். கட்சிக்காகவும், கட்சியை சார்ந்தவர்களுக்காகவும் தான், அவர் வேலை பார்க்கிறார். இதற்காக, அரசின் பணம், அவருக்கு சம்பளமாகவும் கிடைக்கிறது.கடந்த ஏழு ஆண்டுகளாக, அவர் பதவி வகித்து வருகிறார். இந்த கால கட்டத்தில், அமைச்சகத்துக்காக அவர் என்ன செய்துள்ளார்? அவரின் பங்கு என்ன? குறிப்பிட்ட, "டிவி' குழுமம் தான், இதனால் பெரிய அளவில் பயன் அடைந்துள்ளது."சன் டிவி' செயல் இயக்குனர் மீது சேலத்தைச் சேர்ந்த ஒருவர் போலீசில் மோசடி புகார் கொடுத்தார். அடுத்த சில நாட்களில் அவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.


தி.மு.க., ஆட்சியில் இருந்த வரை யாருமே இந்த குடும்பத்தினர் செயல்களை எதிர்த்து போலீஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது. காரணம், போலீஸ் இயந்திரம் முழுவதும் இவர்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.


வருமானவரித்துறையில் நேர்மையான, மனச்சாட்சிக்கு பயந்த அதிகாரிகள் உள்ளனர். நடக்கும் செயல்களை எல்லாம் அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றனர். அமைச்சர் பதவி இழந்தாலோ, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி முறிந்தாலோ, இழந்த கவுரவத்தை மீட்கவும், துன்புறுத்திய மந்திரியை பழிவாங்கவும், வருமானவரித்துறைக்கு அதிக வேலை வந்து விடும்.இவ்வாறு, வருமானத்துறையில் உள்ள, பல நேர்மையான அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி: தினமலர்

அந்த வடக்கு மாவட்டத்தை சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் பெயர் எ.வ.வேலு, திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அந்த வாரப்பத்திரிக்கை குங்குமம், அந்த நாளிதழ் பெயர் தினகரன். ஆண்டவா தி.மு.கவுக்கு சீக்கிரம் அழிவு வராதா?

Tuesday, June 21, 2011

ஐபில் கிரிக்கெட்டும் ஸ்பெக்ட்ரம் ஊழலும்!

என்னடா இது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு விழுகிறதே என்று பார்க்கிறீர்களா? இன்னும் ஸ்பெக்ட்ரம் பூதம் எங்கெல்லாம் நிறைந்திருக்கிறது என்று தெரியவில்லை?
தற்போது எந்த ஐபிஎல் போட்டியும் இல்லாத சூழலில் கலைஞர், இசையருவி, சிரிப்பொலி சேனல்களில் மானாவாரியாக "சென்னை சூப்பர் கிங்க்ஸ்" விளம்பரம் வருகிறதே கவனித்தீர்களா? காரணம் ஒருவர். அவர் இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசன். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர், முரசொலி மாறனின் நீண்ட கால நண்பர், கருணாநிதி குடும்பத்துக்கு சம்பந்தி உறவு, சொல்லிவைத்தது போல் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் (தமிழ்நாட்டில் மட்டும்) விஷம் போல் ஏறும் சிமெண்ட் விலையின் நாயகன், சிமெண்ட் மாபியாவின் தலைவர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும் இன்னொரு சிமெண்ட் அதிபருமான ஏ.சி.முத்தையாவின் பரம எதிரி.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணம் பல்வேறு வழிகளில் ஷாகித் பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த குற்றச்சாட்டில் கனிமொழி திகார் ஜெயிலில் இருக்கிறார். அப்படி வந்த 214 கோடி ரூபாயை கடனாத்தான் பெற்றோம், வட்டியுடன் திருப்பி கொடுத்துவிட்டோம் என்பது கனிமொழி மற்றும் சரத் குமார் ரெட்டி தரப்பின் வாதம். ஸ்பெக்ட்ரம் ஊழல் பெரிதாக வெடித்து ராசா ராஜினாமா செய்து, கைதாவதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் அந்த 214 கோடி திருப்பி கொடுக்கப்பட்டது. எப்பேர்பட்ட கோடீஸ்வரனாக இருந்தாலும் ஒரே நாளில் அவ்வளவு பணத்தை புரட்ட முடியாது அல்லவா? அப்போது உதவிக்கு வந்தவர்கள் தான் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனும், அண்ணாமலை பல்கலைகழக வேந்தர் ராமாசாமி செட்டியாரும். இது சம்பந்தமாக சில நாட்களுக்கு முன் "சிக்கலில் இரண்டு தமிழக கோடீஸ்வரர்கள்" என்ற தலைப்பில் ஜுனியர் விகடனில் ஒரு கட்டுரை வந்தது.

இதையும் மோப்பம் பிடித்துவிட்ட சி.பி.ஐ சீனிவாசன் தரப்பிடம், ஏது அவ்வளவு பணம்? எதற்காக கலைஞர் டிவிக்கு கொடுத்தீர்கள்? என்று விசாரித்ததாக தெரிகிறது. அதற்கு அவர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் எங்கள் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக கொடுத்ததாக தெரிவிக்கிறார். அந்த விளக்கத்தை சி.பி.ஐ ஏற்றுக் கொண்டதா என்று தெரியவில்லை. எப்படா இந்தியா சிமெண்ட்ஸ் விளம்பரம் கலைஞர் டிவியில் வந்தது? என்று பார்த்தால், அந்த நிறுவனம் உரிமை கொண்டாடும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் விளம்பரம் கலைஞர் டிவியில் வகைதொகை இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த காலகட்டமும், முதல் ஐ.பி.எல் ஏலம் நடந்த காலகட்டமும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இருக்கிறதே? மதுரைத் தம்பி ஏதாவதொரு ஐ.பி.எல் அணியை ஏலம் எடுக்க ஆசைப்பட்ட செய்தி பத்திரிக்கைகளில் வந்ததே? எதையும் வளைக்கத் துடிக்கும் ஆக்டோபஸ் குடும்பம் எப்படி பணம் கொழிக்கும் ஐபிஎல்லை விட்டு வைத்தது? அப்படி என்றால் ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தில் தான் சென்னை ஐ.பி.எல் அணி ஏலம் எடுக்கப்பட்டதா? போன்ற அதிகபிரங்கித்தனமான கேள்விகள் உங்களுக்கு தோன்றினால் அதற்கு இந்த கட்டுரையின் ஆசிரியர் எந்த வகையிலும் பொறுப்பு ஆக மாட்டார்.

Sunday, June 5, 2011

திமுக தோற்றது ஏன்?

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சிக்கு என்றுமே தோல்வி இல்லை. 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. படுதோல்வி அடைந்திருப்பதற்கு காரணம் தி.மு.க. தான் என்று சொன்னது தி.மு.க.வை அல்ல. திரு.மு.கருணாநிதி என்பவரைத்தான். அவரது பெயரை சுருக்கினால் தி.மு.க. தானே!

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சி திருக்குவளை மு.கருணாநிதி என்று சுருங்கிப் போனதால் வந்த விளைவுதான் இந்த படுதோல்வி.

உடனே, தி.மு.க.வின் உடன்பிறப்புகளுக்கு ரத்தம் கொதிக்கலாம். கட்சியை வளர்த்ததே கலைஞர்தான். அவரைப் போய் சொல்லுகிறாயே என்று வாயில் வந்ததை எல்லாம் வெளியே துப்புவதற்கு முன்பு....

கட்டுரையை முழுமையாக படித்துவிட்டு, துப்புங்கள்.

தி.மு.க. 1949ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அதை உருவாக்கிய ஐம்பெரும் தலைவர்கள் அறிஞர் அண்ணா. நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், மதியழகன், ஈ.வி.கே.சம்பத். இந்த ஐந்து பேர் தான் கட்சியை தொடங்கியவர்கள். அதில் பேராசிரியர் அன்பழகனும் இல்லை. கலைஞர் கருணாநிதியும் இல்லை. கட்சி தொடங்கப்பட்ட சில நாட்கள் கழித்து தான் தி.க.விலிருந்து விலகி, தி.மு.க.வில் கருணாநிதி தன்னை இணைத்துக் கொண்டதாக திராவிட வரலாற்றில் தெளியவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க.வை தனக்குப் பிறகு கட்டி காப்பாற்ற கருணாநிதி வருவார் என்றும் அண்ணா நினைத்திருக்க மாட்டார். தி.மு.க. மீது அழியாத கறையை கருணாநிதி ஏற்படுத்துவார் என்பதையும் அண்ணா நினைத்திருக்க மாட்டார்.

கலைஞர் கருணாநிதி. 14 வயதில் பொது வாழ்க்கைக்கு வந்தவர். கருணாநிதி ஒரே நாளில், தி.மு.க.வின் கோபுர உச்சிக்கு வந்துவிடவில்லை. ஆனால், தி.மு.க. என்ற கோபுரம் கட்டிய ஒவ்வொரு கற்களிலும் கருணாநிதி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க. தொடங்கிய போது, அவர் ஒரு சாதாரண தொண்டர். தி.க.வில் பற்றுக் கொண்டவர். பெரியார் நடத்தும் குடியரசு இதழில் வேலை பார்த்தவர். பின்னர் சினிமா பக்கம் சென்று கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தவர்.

தி.மு.க.வின் முதல் கூட்டம் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் நடந்த போது, சேலம் மார்டன் தியேட்டர்ஸில் கருணாநிதி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரும் அவருடம் இருந்த கவிஞர் கண்ணதாசனும், தி.மு.க.வின் முதல் கூட்டத்தை பார்க்கவும் அண்ணாவின் பேச்சை கேட்கவும், ரயில் ஏறி வந்தனர். கூட்டம் முடிந்ததும் அன்று இரவு, பத்தோடு பதினொன்றாக அண்ணாவை சந்தித்துவிட்டு வந்தவர்தான் கருணாநிதி. சில நாட்களில் அவருக்கு தி.மு.க.வின் பிரசாரக் குழுவில் இடம் கிடைத்தது. காரணம், திராவிடக் கழகத்தில் மேடைப் பேச்சாளராக வலம் வந்தவர் என்பதை அண்ணா அறிந்திருந்தார்.

கட்சியில் இணைத்துக் கொண்ட பிறகு, தி.மு.க.வில் அண்ணாவை அடுத்து பம்பரமாக வேலை செய்தவர் கருணாநிதி மட்டுமே.

அண்ணாவைப் போல அடுக்கு மொழியில் பேச...

அண்ணாவைப் போல கரகர குரலில் பேச...

அண்ணாவைப் போல மக்களின் அன்றாட பிரச்னைகளை நுணுக்கமாக பேச...

கருணாநிதியால் மட்டுமே முடிந்தது.

அண்ணாவின் கூட்டத்துக்கு கூடும் கூட்டத்திற்கு அடுத்தபடியாக, கருணாநிதிக்கு கூட்டம் கூட தொடங்கியது. கட்சியின் ஐம்பெரும் தலைவர்கள் எல்லாரும் சென்னையை மையமாக கொண்டு அரசியல் செய்தார்கள். ஆனால், கருணாநிதி மட்டும் தான் தமிழ்நாட்டின் எல்லா பகுதிக்கும் சென்று அரசியல் செய்தார். சினிமாவுக்கு வசனம் எழுதி புகழ் பெற்றிருந்தால், அவருக்கு மற்ற தலைவர்களை விட வரவேற்பு இருந்தது மறுக்க முடியாத உண்மை.

தி.மு.க.வில் சோழ மண்டல தளபதியாக இருந்தாலும், அண்ணாவின் தம்பிகளில் ஆறாவது ஏழாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. ஒரே வருடம் தான், 1950வது வருடத்திலேயே, அண்ணாவின் தளபதியாக மாறினார் கருணாநிதி. சில நேரத்தில் அண்ணாவை கூட நெருங்க முடியாது. எந்த நேரத்திலும் கருணாநிதியை அணுகிவிடலாம். தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் கருணாநிதி கெட்டிக்காரர்.

கூட்டத்துக்கு கூட்டம் வசூல் வேட்டை நடத்தி, அண்ணாவை மெய் சிலிர்க்க வைப்பார். கட்சிக்குள் பிரச்னை வரும்போது, அண்ணாவிடம் சொல்லாமலே சமாளித்துவிட்டு, பிறகு அண்ணாவிடம் சொல்லுவார். கிட்டத்தட்ட அண்ணாவுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும் தான் ஒரு தூதராக, பாலமாக தன்னை காண்பித்துக் கொண்டார்.

முதல் முறையாக தி.மு.க. தேர்தலில் போட்டியிடப் போகிறது. அக்கூட்டத்தில் அண்ணாவுக்கு முன்பாக பேசி, அரங்கத்தை அதிர வைத்தார். அதுதான், கருணாநிதியை, கட்சிக்கு யார் என்று காட்டியது. அக்கூட்டத்தில், கருணாநிதியை அண்ணா வானாளவ புகழ்ந்து தள்ளிவிட்டார்.

அப்படி என்ன பேசிவிட்டார்.

வாழ்வு மூன்று எழுத்து.

வாழ்வுக்கு தேவையான பண்பு மூன்று எழுத்து.

பண்பிலே பிறக்கும் அன்பு மூன்று எழுத்து.

அன்பிலே சுரக்கும் காதல் மூன்று எழுத்து.

காதல் விளைவிக்கும் வீரம் மூன்று எழுத்து.

வீரம் செல்லும் களம் மூன்று எழுத்து.

களத்திலே பெறும் வெற்றி மூன்று எழுத்து

அந்த வெற்றிப்பாதைக்கு நம்மை அழைத்துச் செல்லும் அண்ணா மூன்று எழுத்து.

-இதுதான் அன்றைக்கு ஹைலைட்.

அரசியலில் இருந்துக் கொண்டே, சினிமாவுக்கு அவர் எழுதிய வசனங்கள் அவரை இன்னும் பிரகாசிக்கச் செய்தன.

1957ம் ஆண்டு நடந்தத் தேர்தலில், கருணாநிதி போட்டியிட்டத் தொகுதி குளித்தலை. அவர் எதிர்பார்த்த தொகுதி, நாகப்பட்டினம். ஆனால், அவர் சளைத்தாரா. குளித்தலையில் தி.மு.க. தலைகள் என்று கணக்கெடுத்தால், பத்து கூட தேறாது. அத்தேர்தலில் தி.மு.க. 15 தொகுதிகளில் தேறியது. அதில் ஒருவர் கருணாநிதி.

அன்றிலிருந்து 2011 வரை அவரது தனிப்பட்ட தேர்தல் வாழ்க்கையில் தோல்வியே இல்லை. தேர்தல் பணியில், பிரசாரத்தை விட எல்லா வழிமுறைகளையும் கையாளக் கற்று கொண்டிருந்தார் கருணாநிதி. 1959ம் ஆண்டு சென்னையில் நடந்த மாநகராட்சித் தேர்தலில், தி.மு.க. 90 இடங்களில் போட்டியிட்டது. இதில் 20 முதல் 25 பேர் ஜெயிக்கலாம் என்று அண்ணா கருதியிருந்த நேரத்தில், கருணாநிதியும் கண்ணதாசனும் களத்தில் இறங்கி 45 பேரை ஜெயிக்க வைத்தனர். ஆனால், கருணாநிதிக்கு மட்டும் அண்ணா கனையாழி பரிசளித்தார்.

சில வருடங்களில், இந்தி போராட்டம். இந்திய அரசியல் வரலாற்றில் தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எத்தனையோ பேர் தீக்குளித்தனர். ஆண்டுக்கணக்கில் சிறையில் இருந்தனர். அவர்கள் எல்லாரையும் விட கருணாநிதிக்கு தான் பெரிய பெயர் கிடைத்தது.

இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கருணாநிதிக்கு பாளையங்கோட்டை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த பாளையங்கோட்டை சிறை தண்டனை தான் கருணாநிதிக்கு தி.மு.க.வில் பெரும் வரவேற்பை கொடுத்தது. அண்ணாவின் முதல் தளபதியாக வலம் வரத்தொடங்கினார்.

ஆனால், அண்ணாவுக்கு இணையாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள மாட்டார். ஏன் தெரியுமா. அண்ணாவுக்கு இணை என்று தன்னை நினைத்து அரசியலில் தோற்றுப் போனவர் சம்பத். அந்த பாடத்தை கருணாநிதி உணர்ந்திருந்தார்.

கட்சியில் தனக்கு எதிர் கோஷ்டிகள் எக்கசக்கமாக இருந்தாலும், அவர்களை எதிரியாக பாவிக்காமல், அவர்களை கோபித்துக் கொள்ளாமல் சாதுர்யமாக இருந்து பழகி, அண்ணாவிடம் நல்ல தொண்டனாகவே முன்னிறுத்திக் கொண்டவர் கருணாநிதி. அண்ணாவும், கருணாநிதியிடம் கோபத்தை காண்பித்தாலும், அவரை அரவணைத்துக் கொள்வார்.

காரணம், நிதி வசூலிப்பதில் கருணாநிதிக்கு இணை கருணாநிதி. நிதி வசூலிக்க கருணாநிதி போகாத இடம் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களுக்கு சென்று கூட்டத்தை கூட்டி வசூலித்துவிடுவார். தேர்தல் நிதியா... பத்து லட்சம் அண்ணா கேட்டால், 11 லட்சத்தை தருவார் கருணாநிதி.

1967ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. கருணாநிதிக்கு பொதுப்பணி மற்றும் போக்குவரத்துத்துறை கிடைத்தது. கட்சியில் மட்டுமல்ல, அரசு அதிகாரத்திலும் கருணாநிதியின் வேகம், மற்ற அமைச்சர்களை கிடுகிடுக்க வைத்தது.

1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அறிஞர் அண்ணா கண் மூடினார். தி.மு.க. தொடங்கிய நாளிலிருந்து அண்ணாவுக்கு அடுத்த தலைவராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். அவர்தான் கட்சியின் பொதுச் செயலாளர்.

'தம்பி வா... தலைமையேற்க வா..: என்று அண்ணாவே நாவலரை அழைத்தவர். ஆனால், அவரா அடுத்த முதல்வராக வந்தார். கருணாநிதி களத்தில் குதித்தார். வென்றார். முதல்வரானார். 45 வயதுதான், தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, அதுவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்த முதல் முதல்வர் கருணாநிதி.

அன்று முதல் கட்சியின் நாடியும் அவரே. நரம்பும் அவரே. எல்லாமும் அவரே. அவர்தான் தி.மு.க.வின் உயிராகவும் மாறினார். ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்து, மக்களையும் கவர்ந்தார். தி.மு.க. உறுப்பினர்கள் என்று அல்லாது, தி.மு.க. அபிமானிகள் என்ற கூட்டத்தை உருவாக்கவும் செய்தார். அரசு ஊழியர்கள், பொதுமக்களில் பலர் தி.மு.க. ஆதரவாளர்களாக மாற்றியத்தில் கருணாநிதிக்கு பெரும் பங்குண்டு.

ஆனால், அண்ணாவிடம் பாடம் படித்த கருணாநிதி, அண்ணா வழி நடக்கவில்லை. பெரியார் போல நடந்து கொண்டார்.

பெரியார் எந்த பொறுப்பையும் யாருக்கும் தரமாட்டார். அதனால், அடுத்த நிலை தலைவர்கள் உருவாகவே முடியவில்லை. அதன் காரணமாகத்தான், கருணாநிதி தி.க.விலிருந்து விலகி அண்ணா ஆரம்பித்த தி.மு.க.வுக்கு வந்தார்.

ஆனால், அண்ணா எப்படி நடத்தினார். எல்லாருக்கும் பொறுப்புக் கொடுத்தார். எல்லாரையும் அரவணைத்தார். அதனால் தானே, கருணாநிதி வளர் முடிந்தது. முதல்வராக முடிந்தது. தனது அதிகார முடிவால், தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆரை தூக்கி எறிந்தார்.

1977ம் ஆண்டு ஆட்சி பொறுப்பு போனதும், கட்சியை கலகலக்கவில்லை. கட்டுக்கோப்பாய் தி.மு.க. இருந்தது. கட்சியை தாங்கிப்பிடித்தவர் கருணாநிதி மட்டுமே. 1977ம் ஆண்டில், கருணாநிதியை விட்டு எம்.ஜி.ஆரை நோக்கி ஓடியவர்கள் பலர். தான் முதல்வராக வருவதை தடுத்த நாவலர் கூட எம்.ஜி.ஆர். பக்கம் சென்றுவிட்டார்.

14 வருடங்கள் கழித்து, 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தி.மு.க. இரண்டு ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை. ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார் கருணாநிதி. மீண்டும் 2001ல் தோல்வி. 2006ல் மீண்டும் ஆட்சி.

இப்படி தி.மு.க.வை ஆறுமுறை அரியணை ஏற்றி, அதில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் கருணாநிதி. இச்சாதனையை எந்த அரசியல் தலைவரும் நிகழ்த்தியது கிடையாது.

72 ஆண்டுகளாக அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இருக்கிறார்.

ஐந்து முறை முதல்வராக இருந்தவர்.

அரசியல் சாணக்கியர் என்று மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பட்டவர்.

தி.மு.க.வை ஆரம்பித்த போது, மேடைக்கு எதிரே இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்தவர் கருணாநிதி. ஆனால், 1969ம் ஆண்டுக்கு பிறகு நாற்பது ஆண்டுகளாக தி.மு.க.வின் காவல் தெய்வம் கருணாநிதி மட்டுமே. கருணாநிதியின் அரசியலும் தமிழ்நாட்டின் வரலாறும் ஐம்பது ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்றாக பின்னிப் பிணைந்தவை. அவர் இல்லாமல் அந்த ஐம்பது

ஆண்டு கால வரலாற்றை தமிழ்நாட்டில் எழுதவே முடியாது.

எத்தனை சறுக்கல்கள்... எத்தனை இடையூறுகள்... இப்படி ஒரு சோதனைகள் வேறு எந்த தலைவருக்காவது நிகழ்ந்திருந்தால், அவர் அரசியலை விட்டு வெளியேறி இருப்பார் அல்லது வெளியேற்றப்பட்டு இருப்பார்.

ஆனால், கருணாநிதி அரசியலில் வெளியேறவும் இல்லை. வெளியேற்றவும் முடியவில்லை. காரணம், அவரது தன்னம்பிக்கை. அவரது திறமை.

தி.,மு.க.வின் எல்லா பெருமைக்கும் காரணமான கருணாநிதியே, இன்று தி.மு.க.வின் சிறுமைக்கு காரணமாகி இருக்கிறார் என்றால் அது தவறேதும் இல்லை.

2011ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படுதோல்வியை சந்தித்திருக்கிறது.

இதற்கு என்ன காரணம் என்று விவாத மண்டபத்தில் கேள்வி எழுப்பி இருந்தோம்.

1. ஊழல்

2. மின்வெட்டு

3. விலைவாசி உயர்வு

4. குடும்ப ஆட்சி

5. ரவுடியிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்து

6. கனிமொழி.

ஆனால், தி.மு.க.வின் இந்த அளவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு, மேற்கூரிய ஆறு காரணிகள் சிறு சிறு கூறுகள் மட்டுமே.

தி.மு.க.வின் படுதோல்விக்கு முழு காரணம் திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி மட்டுமே என்று தமிழ் லீடர் கருதுகிறது.

எத்தனை பெரிய அரசியல்வாதி. 70 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலை கலக்கிக் கொண்டிருப்பவர். ஐந்து முறை அரசாங்க இயந்திரத்தை இயக்கியவர். இவருக்கா தெரியாது, 2011ம் ஆண்டில் நடக்கும் தேர்தலில் தி.மு.க. தோற்கப் போகிறது என்பது கருணாநிதிக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

2006ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததுமே, தி.மு.க. கொண்டு வந்த நலத்திட்டங்கள் எல்லாம் நல்லத்திட்டங்கள். இலவச டிவி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கேஸ் ஸ்டவ், கலைஞர் மருத்துவ திட்டம்.... இப்படி வந்த திட்டங்களால் தி.மு.க.வை யாரும் தோற்கடிக்க முடியாது என்ற நினைப்பு வந்தது தப்பில்லை.

ஆனால், தி.மு.க. தோற்கடிக்கப்பட்டுவிட்டதே எப்படி?

கருணாநிதி என்ற தி.மு.க.வின் தூண் தான் இந்த தோல்விக்கு ஒட்டு மொத்த பொறுப்பு!

கருணாநிதி என்பவர் தமிழ்நாட்டின் மன்னர். அவர் ஆட்சியை எப்படி நடத்த வேண்டும். தனது ஆட்சிக்கு பங்கம் வரக்கூடாது. குறிப்பாக தனக்கும் தனது குடும்பத்துக்கும் அவச்சொல் வந்துவிடக்கூடாது என்று கருதி ஆட்சி புரிந்திருக்க வேண்டும்.

சாணக்கியரின் நீதி நூல் எனப்படும் அர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது.

பாகம்:1- அத்தியாயம் 17:

அருகிலுள்ள எதிரிகளிடம் இருந்தும் தூரத்திலுள்ள எதிரிகளிடம் இருந்தும் தன்னை காத்துக் கொள்ளும் மன்னனே நாட்டை காப்பாற்றத்தக்கவன். முதலில் மனைவியிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் மன்னன் தன்னை காத்துக் கொள்ள வேண்டும்.

-இது கருணாநிதி அறியாதவரா?

அதே அத்தியாயத்தில், "மன்னன் தன் பிள்ளைகளை அவர்கள் பிறந்தது முதலே, கண்காணிக்க வேண்டும். ஏனென்றால், அரச குமார்கள் நண்டு போன்றவர்கள். பெற்றவர்களையே விழுங்கிவிடுவார்கள். அரச குமார்களை இஷ்டம் போல இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்குமாரு செய்வது உயிருடன் கொல்வதற்கு சமம், என்கிறார் சாணக்கியர்.

-அதுதான் இன்று தி.மு.க.வில் நடந்துக் கொண்டிருக்கிறது.

பாகம்-8- அத்தியாயம்-4:

மக்களிடம் கலகம். அரச குடும்பத்தில் கலகம் இரண்டில் அரச குடும்பத்தில் கலகமே கொடியது. மக்களிடையே ஏற்படும் கலகத்தில் அவர்கள் தலைவனை வசப்படுத்திக் கொள்வதின் மூலமாகவும் கலகத்துக்கான காரணங்களை ஆராய்ந்து அதை விலக்குவதாலும் கலகத்தை ஒழித்துவிட முடியும். கலக்கார மக்கள் தங்களிடம் பரஸ்பரம் உள்ள பகையால், மன்னனுக்கு உதவியே செய்வார்கள்.

ராஜ குடும்பத்தில் கலகம் ஏற்பட்டால், அது மக்களின் துன்பத்துக்கும் அழிவுக்கும் காரணமாக அமைந்துவிடும். இந்த கலகத்தை நீக்குவதற்கு இருமடங்கு சிரமப்பட வேண்டியிருக்கும் என்கிறார் சாணக்கியர்.

இன்று தி.மு.க.வுக்கு என்ன நடந்தது. தி.மு.க.வுக்கு அவப்பெயர் எப்படி வந்தது. முழுக்க முழுக்க குடும்பத்தால் தான். அந்த குடும்பத்தால், நடக்கும் கூத்துக்கள் ஒவ்வொன்றையும் கருணாநிதி அனுமதித்ததால்...

ஒரு தலைவன், ஒரு வாரிசை கொண்டு வரலாம். ஆனால், கருணாநிதியின் எத்தனை வாரிசுகள் அரசியலில் கோலோச்சின.

ஸ்டாலின். இவரை மக்கள் ஏற்றுக் கொண்டதாகவே வைத்துக் கொள்வோம்.

ஸ்டாலினுக்கு தலைவராக தகுதி இருக்கிறதோ இல்லையோ, அவரை தலைவராக்க முயற்சிகள் நடந்தன.

ஆனால், ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி வெளிப்பட்ட போது, அவரை அடக்கி வைத்திருக்க வேண்டும். அடுத்து பேரன் தயாநிதி மாறனுக்கு மத்தியில் பதவி. அதன் பின்னர், கனிமொழிக்கு எம்.பி. பதவி. அடுத்து அழகிரிக்கு மத்தியில் பதவி. இப்படி குடும்பத்தினரை கொண்டு வந்து தி.மு.க.வை அழிக்க முற்பட்டது சரியான செயல்பாடா?

கட்சியில் கருணாநிதியை யாராலும் எதிர்க்க முடிந்ததா? அவருக்கும் இருக்கும் துணிச்சலும், சாதுர்யமும் யாருமே எதிர்க்க முடியவில்லை. எதிர்த்தவர்கள் எல்லாம் செல்லாக் காசாக்கியவர் தானே கருணாநிதி.

ஆனால், அழகிரி எதிர்த்த போது என்ன செய்தார் கருணாநிதி.

தயாநிதி மாறன் எதிர்த்த போது என்ன செய்தார் கருணாநிதி.

குடும்பத்தினர் எதிர்த்த போது, மண்டியிட்ட காரணம் என்ன?

கண்கள் பனித்தது: இதயம் இனித்தது. ஆனால் அதிகாரமும் ஆட்சியும் மக்களுக்கு கசந்ததே? அது புரியாமல் போனதே கருணாநிதிக்கு.

இதைவிட ஓர் உண்மை கருணாநிதிக்கு புரியாமல் போனதை ஏற்கவே முடியாது.

அதுதான் 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல்.

2006ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டுக்குள் நடந்த இடைத்தேர்தலில், பணத்தை வாரி இறைத்து தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த பாணியை கடைப்பிடித்து, 2009ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகள் 28. அ.தி.மு.க. 12 தொகுதிகளை பிடித்தது.

தமிழ்நாட்டில் இருக்கும் 40 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 12 தொகுதிகளை பிடித்தது மட்டுமல்ல... வடசென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், திண்டுக்கல், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய ஆறு தொகுதிகளில் தி.மு.க. பெற்ற வாக்கு வித்தியாசங்களை கருணாநிதி அலசி ஆராயவில்லையா?

இந்த ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க.வைவிட சற்று கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் தான் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. குறிப்பாக வடசென்னையில் 19 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசம். மத்திய சென்னையில் 33 ஆயிரம் வாக்கு வித்தியாசம். ஸ்ரீபெரும்புதூரில் 24 ஆயிரத்து 675 ஓட்டுக்கள். நாகப்பட்டினத்தில் 46 ஆயிரத்து 745 ஓட்டுக்கள். சிவகங்கையில் 2 ஆயிரத்து 851 ஓட்டுக்கள்.

இந்த ஆறு தொகுதிகளில் தே.மு.தி.க. வாங்கி ஓட்டுக்கள் இங்கே மாறி இருந்தால், அ.தி.மு.க. 18 தொகுதிகளை வெற்றி பெற வாய்ப்பு. அப்படிப் பார்த்தால், 2009ம் ஆண்டு நடந்தத் தேர்தலில் தி.மு.க. 22, அ.தி.மு.க. 18 என்ற நிலை ஏற்பட்டிருக்கும். இது தி.மு.க.வுக்கு மாபெரும் வெற்றி இல்லை.

அடுத்து, 2010ம் ஆண்டு பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவு என்ன சொன்னது?

தி.மு.க. : 77,669

பா.ம.க. : 41,285

அ.தி.மு.க.: 26,787

தே.மு.தி.க: 11406

-இதுதான் கட்சிகளின் ஓட்டு பெற்ற நிலவரம்.

அதாவது, தி.மு.க. பெற்ற ஓட்டுக்களை விட எதிர்கட்சிகள் வாங்கிய ஓட்டுக்களை சேர்த்துப் பார்த்தால், 79 ஆயிரத்து 478 ஓட்டுக்கள் வருகின்றன. ஆளும் கட்சிக்கு எதிராக, எண்ணற்ற நல்லத்திட்டங்களை செய்தும், கிட்டத்தட்ட 80 ஆயிரம் ஓட்டுக்கள் எதிராக விழுந்திருக்கின்றன.

இதிலே இன்னொரு விஷயம்தான் முக்கியம். பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு தி.மு.க. செய்த செலவு 46 கோடி ரூபாய். எல்லா நலத்திட்டங்களையும் செய்து 46 கோடி கொடுத்து பெற்ற வெற்றி. இந்த விஷயம் கருணாநிதிக்கு தெரியாதது அல்ல.

இந்த நிலைமையில் ஸ்பெக்டரம் ஊழலுடன், குடும்ப சுமை கொண்ட அரசியல் நடத்திக் கொண்டிருந்த கருணாநிதிக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும் என்று வெறி பிடித்தது போல பேட்டிக் கொடுக்கிறார் என்றால், அவரை என்னவென்று சொல்வது?

இதையெல்லாம் அறிந்துக் கொள்ள முடியாத சாணக்கியரா நீங்கள் கருணாநிதி?

119 தொகுதிகளில் போட்டியிட்டு, 110 இடங்களை பிடித்துவிடுவோம் என்று உளவுத்துறை சொல்வதை கேட்டுக்கொண்டிருந்த சாணக்கியரா நீங்கள் கருணாநிதி?

உங்களை சுற்றி இருந்த அமைச்சர்களே, நம்பிக்கை இல்லாத சூழலிலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்துடும் என்று நீங்கள் உங்களையே தேற்றிக் கொள்ளும் அளவுக்கு தள்ளப்பட்ட சாணக்கியரா நீங்கள் கருணாநிதி.

சாணக்கியராக இருந்த நீங்கள், 2006ம் ஆண்டு முதல் சறுக்கத் தொடங்கிய விளைவுதான் இது.

அதுவும், பதவி ஆசையில் சக்கர நாற்காலியில் அமர்ந்த போதே நீங்கள் கட்சியிலிருந்து ஒதுங்கி இருந்தால், உங்களை யாரும் ஏமாற்றி இருக்க மாட்டார்கள்.

நீங்களும் ஊழல் குடும்பத்தின் தலைவன் என்ற அவப்பெயர் பெற்றிருக்க மாட்டீர்கள்.

என்ன செய்வது?

அறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சி தி.மு.க. அழியக் கூடாது என்று நினைத்தால்,

முதலில் நீங்கள் தலைவர் பதவியை தூக்கி எறியுங்கள்.

இரண்டாவது கட்சியில் பதவியில் இருக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் வெளியேற்றுங்கள்.

வேண்டுமானால், ஸ்டாலினை மட்டும் வைத்துக் கொள்ள கட்சியிடம் அனுமதி கேளுங்கள்.

இதை செய்யாவிட்டால், தி.மு.க.வுக்கு, 2016ம் ஆண்டு நடக்கும் அடுத்தத் தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை இல்லை! இல்லை!

கடைசியாக,

இத்தேர்தலில் தி.மு.க. இன்னொரு பாடத்தையும் உணர வேண்டும். தி.மு.க.வில் உறுப்பினர்கள் இல்லாமல் அபிமானிகளாக வந்த பொதுமக்கள் ஏராளம் ஏராளம். அந்த ஏராளத்தில் இருக்கும் வாக்கு வங்கி என்பது சாதாரணமானது அல்ல. அவர்கள் எல்லாம் தி.மு.க.வை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்றால், தி.மு.க.வில் இருக்கும் குடும்ப ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்பது தான் பெரும்பாலான வாசகர்களின் கருத்துக்களாக இருந்தது.

நன்றி: தமிழ்லீடர்